தேர்தல் சட்டங்களை மீறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்
நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தராதரம் பார்க்கமால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகளை அனைத்து பொலிஸ்
அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளதுடன் அதற்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்முறை தேர்தலிற்காக சொந்த ஊரிற்கு செல்லுபவர்களுக்கு நாளை (31) முதல் விஷேட போக்குவரத்து
திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.