தேர்தலுக்கான கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

Spread the love

தேர்தலுக்கான கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

2020 பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர், பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , வீட்டிற்கு வீடு செல்வதும் துண்டுப்

பிரசுரங்களை விநியோகிப்பதையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் எதிர்வரும் 4ம் திகதி எந்தப் பிரசார நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. தேர்தல்

தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

      Leave a Reply