தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்
தெற்கு தென்கொரியா Daegu பகுதியில் உள்ள அடுக்கு மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
மேலும் இந்த தீ விபத்தில் நாற்பத்தி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,தென்கொரியா Daegu பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Daegu நகரில் உள்ள இந்த குடியிருப்பின் ஏழாவது மடியின் ஏற்பட்ட தீ விபத்தே அந்த அடுக்கு மாடி கட்டிடம் எரிந்து அழிய காரணமாக அமைந்துள்ளது
இந்த அடுக்கு மாடியின் ஏழாவது மாடியில் ஐம்பது வயது நபர் ஒருவரே இந்த தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கண்டறிந்துள்ளதாக தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன
தென்கொரியாவின் தெற்கு Daegu அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படு காயமடைந்தவர்களில் சிலர் மூச்சு திணறலுக்கு உள்ளாகியுள்ளதாக தென்கொரியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
அதே குடியிருப்பில் வசித்து வந்த ஐம்பது வயதானவரே இந்த தீ விபத்துக்கு காரணம் என தெரிவிக்கும் அதிகாரிகள் அவரை இறந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்
தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்
இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது விபத்தா என்பது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை ,குறித்த நபரே சந்தேகிக்க படுவதாக மட்டும் தெரிவிக்க பட்டுள்ளது
இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,குறித்த தீ விபத்து சம்பவத்தில் சிக்கி பத்துக்கு மேற்பட்ட அடுக்கு மாடிகள் சேதமாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தடவியல் நிபுணர்கள் தீ பபற்றலுக்கான தடயங்களை சேகரித்துள்ளதாவும் அதன் ஊடாக சிறைப்பு புலன் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,
இவர்கள் வழங்கும் ஆய்வுகளின் அடைப்படையிலேயே குறித்த தீ விபத்து தொடபிலான முழுமையான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
புத்தம் புது அதி உயர் அடுக்கு மாடியில் ஏற்பட்ட தீ விபத்து அந்த அடுக்கு மாடியில் வசித்து வந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
பாதிக்க பட்ட மக்களுக்கு தென்கொரியா ஆளும் அரசு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையு, முன் வைக்க பட்டுள்ளது .