துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்

களனிய திப்பிட்டிகொட பகுதியில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (25) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வெல்லம்பிட்டிய, அங்கொட, பேலியகொட மற்றும் தொம்பே பகுதிகளை சேர்ந்த 24, 34 மற்றும் 44 வயதுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

T-56 ரக துப்பாக்கியே இதன் போது துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No posts found.