துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மாளிகாவத்தை முதல் நாள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த முதலாம் திகதி மாளிகாவத்தை எச்.ஆர் ஜோதிபால மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கொழும்பு 08, பேஸ்லைன் வீதி பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த 20 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.