துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
Spread the love

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது ,காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் சந்தேக நபர் கைது

கொஸ்கொடை பொலிஸார் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு

கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த

பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

இலங்கையில் சமீப கலங்கலாக இவ்வாறான குற்றங்கள் அதிகரித்து வருவது ,இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது .

தடை செய்ய பட்ட ஆயுதங்கள் எவ்வாறு இவ்வாறான கொலை குற்றவாளிகளிடம் சிக்கியது என்பதற்கு ,.இலங்கை காவல் துறையிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .