தீ கொண்டு எழுவாய் …!
கறுப்பு தார் வீதியிலே
கடுகதி வேகத்திலே …
ஓடும் வண்டிகளின்
ஓல சத்தம் கேட்கிறது ….
நாளும் நால் உயிர் பலிகள்
நாள் தோறும் நடக்கையில..
கண் மூடி உறங்கும்
காவல்துறை நினைக்கையில….
வாள் தீட்டி ஆளும் தலை
வலியோடு வெட்டிடவே ….
ஆள் நெஞ்சு துடிக்கிறது
அங்கமெலாம் கொதிக்கிறது …..
பிரியும் உயிர் தடுத்திடவே
பிடரி அடி கொடுத்திடவே …
சாலைகளின் விதிமுறையை
சாலை காப்பு தடுக்கலையே ….
கையூட்டு கை நிறைய
கண்ணெதிரே உயிர் பிரிய …
வாய் பார்த்து நிற்கின்ற
வக்கற்ற அரசு இது …..
கொதிக்கின்ற கோபத்திலே
கொழுத்திடுவோம் வா மனிதா…
ஆட்சி தலை உடைத்தெறிந்து – நல்
ஆட்சியை நட்டிடுவோம் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -20/04/2019