தீபிகா கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன்- பிரியா வாரியர்

Spread the love

பிரபல நடிகை தீபிகா கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன்- பிரியா வாரியர்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன் என மலையாள பட நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோனே கண்ணடித்ததில் கவிழ்ந்துவிட்டேன்- பிரியா வாரியர்
தீபிகா படுகோனே, பிரியா வாரியர்


ஒரு அடார் லவ் மலையாள படத்தில் அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் அப்படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்த காட்சி ஒரே நாளில் பிரபலம் ஆனது.

அவரை போலவே பலரும் கண்ணடித்து வீடியோக்கள் பதிவிட்டனர். இந்தி நடிகர் ரிஷிகபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் பிரியா வாரியர் கண்ணடித்து நடித்ததை புகழ்ந்து

தள்ளினர். இந்த காட்சி வெளியாகி 2 வருடம் ஆகியும் இன்னமும் அதன் பரபரப்பு ஓயவில்லை.

நடிகை தீபிகா படுகோனே ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக ‘சாபாக்’ இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்போல் முகத்தில் மேக் அப் அணிந்து படப்பிடிப்பில் இருந்த தீபிகா அருகிலிருந்த

இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று ஒற்றை கண்ணடித்து பிரியா வாரியருக்கு சவால் விடுவதுபோல் சிரித்தார் தீபிகா.

தீபிகா படுகோனே, பிரியா வாரியர்

இக்காட்சி நெட்டில் வீடியோவாக வைரலானது. அதை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பிரியா வாரியர், ‘உண்மையிலேயே அந்த தேவதை (தீபிகா) தான் இப்படி

கண்ணடித் தாரா? 2019ம் ஆண்டு முடிவதற்கு இதைவிட வேறு நல்ல வழி இல்லை. தீபிகாவின் கண்ணடிப்பில் நான் கவிழ்ந்துவிட்டேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply