தாயை கோடாரியால் கொத்தி கொன்ற மகான்
போதைபொருளுக்கு அடிமையான மகனால் மேற்கொள்ளப்பட்ட கோடரி தாக்குதலில் படுகாயமடைந்த தாய் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பலாதொட்ட பகுதியை சேர்ந்த தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகன் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.