தம்பி ஆறுமுகன் தொண்டமானுக்கு ஆழ்ந்த இரங்கல்-இராதாகிருஸ்ணன்

Spread the love

தம்பி ஆறுமுகன் தொண்டமானுக்கு ஆழ்ந்த இரங்கல்-இராதாகிருஸ்ணன்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமாகிய தம்பி ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு செய்தி கேட்டு

மிகுந்த துக்கத்திற்கு உள்ளானேன். இந்த திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும் என்று கூறுகின்றார் மலையக

மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.

தொடர்ந்து அவரது அனுதாப செய்தியில்

எனக்கும் அவருக்கும் நீண்டகால உறவு இருக்கின்றது நான் எனது அரசியலை அவரது தாத்தாவான சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடனே ஆரம்பித்தேன். ஐயாவின் இறப்பிற்கு பின்னர்

எனக்கு மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை பெற்றுக் கொடுத்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களே. தவிர்க்க முடியாத காரணத்தினால் இவர்களை விட்டு பிரிய வேண்டிய நிலை

ஏற்பட்டு விட்டது. இருந்தும் இவரையோ இவரின் குடும்பத்தையோ ஐயா அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களையே

விமர்சித்து கிடையாது. இவர்களுக்கு என்று ஒரு மறியாதை என்னிடம் இருந்தது.

தற்போது இந்த இக்கட்டான நிலையில் துயரத்தில் இருக்கும் அன்னாரின் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் உட்பட அவரது

விசுவாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவரது இறுதி கிரிகைகள் மலையத்தில் பூரண அரச மறியாதையுடன் நடப்பதற்கு அராங்கம் நடவடிக்கை எடுக்க

வேண்டும். மலையத்தில் தொழிற்சங்க மற்றும் தொழிற்சங்கம் கட்சி பேதங்கள் இன்றி அவருக்கான மறியாதையை அனத்து

மக்களும் செலுத்த வேண்டும். இவரது இறுதி கிரிகைள் முடியும் வரை மலையகத்தில் துக்கத்தினம் அனுஷ்டிக்க வேண்டும் என அவர் மேலும் கருத்து தெரிவித்தார்

    Leave a Reply