தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடைந்து வாக்களித்த கோலம்
இலங்கை பாராளுமன்றில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் .இவரது வெற்றி முதலே தீர்மானிக்க பட்ட ஒன்று என்பதை இன்றைய நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது .
மொட்டு கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் தனது அரசியல் விளையாட்டை எதிர்காலத்தில் தொடருவாரா என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .
தான் நாட்டின் ஜனாதிபதியான நிலையில் தனது பாராளுமன்ற பேச்சை சுருக்கி கொண்ட ரணில் தந்திர நகர்வு ஆரம்பிக்க பட்டு விட்டதை எடுத்து காட்டியது .
ரணிலை ஆதரிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது என்கின்ற வாதம் போலியானது என வெளிப்படுத்த பட்டது .
தமிழ் தேசிய கூட்டமைப்பை சஜித் மற்றும் அழகப்பெரும ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
அதில் சஜித் பக்கம் வாக்கு அளிக்க உள்ளவர்களும் அதேபோல மொட்டு கட்சியின் பக்கம் உள்ள உறுப்பினர்கள் விபரமும் வெளியானது.
ஊடக நபர் ஒருவர் பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் காட்சி படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
அதனை இந்த காட்சியில் நீங்கள் கண்டு கொள்ள முடியும் .தள்ளாடும் சம்பந்தர் அரசியல் சித்து விளையாட்டு மக்களே இதில் தெரிகிறது அல்லவா .
இருவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து வாக்களித்து வாக்கு சிதறலை மேற்கொண்டுள்ளது படத்தை உற்று கவனியுங்கள் .