தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

Spread the love

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஸ்பெயின் நாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா அறிகுறி உள்ள நபர் மருத்துவமனைக்கு செல்லும்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 324 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் 6 பேருக்கு வைரஸ் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு

Leave a Reply