தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 96 பேர் கைது

Spread the love

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 96 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று(08) காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 80,284 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்துக்குள் நுழையும், வெளியேறும் 2,555 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 325 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Leave a Reply