டயகம சிறுமியின் நினைவேந்தல் நிகழ்வில் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணியாற்றிய டயகமவைச் சேர்ந்த சிறுமி கடந்த 17ம் திகதி மரணமடைந்த நிலையில் நேற்;றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன்
தொண்டமான் டயகம பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு. ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்தியேற்றி அஞ்சலியும் செலுத்தினார்.
மேலும் மலையக உறவுகளும் தத்தமது இல்லங்களில் மெழுகுவர்த்தியேற்றி ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாரறு கேட்டுக்கொண்டார். இதற்கமைவாக மலையகத்தில் பல இடங்களிலும் நேற்று
மாலை 6.30 மணிக்கு மெழுகுவர்த்தியேற்றி ஹிஷாலயின் ஆத்ம சாந்திக்காக பிராத்தித்தமை குறிப்பிடத்தக்கது.