ஜனாதிபதி தனது மூன்று மாத சம்பளத்தை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது மூன்று மாத சம்பளத்
தொகையான 292,500.00 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
அதற்கான காசோலை ஜனாதிபதி அவர்களினால் இன்று (14) பிற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.