சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு : முத்தையா முரளிதரன் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

Spread the love

சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு : முத்தையா முரளிதரன் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

தமிழினப்படுகொலையினை நிராகரிப்பதோடு, தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்தினையும் இழிவுபடுத்தியவர் சிறிலங்கா

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக திரைநட்சத்திரம் விஜய் சேதுபதியின் நடிப்பில், தமிழ்நாட்டில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள முத்தையா

முரளிதரனை மையப்படுத்திய திரைப்படம் தொடர்பில், உலகத்தமிழர்களிடையே எழுந்துள்ள கண்டனக்குரல்கள்

தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சமூகவலைத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்துப்பதிவிட்டுள்ளார்.

சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், விளையாட்டையும்

அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply