செத்து போன காதல்

Spread the love

செத்து போன காதல்

ஆள் மனசு தேடுதடி – விழி
ஆறாக ஓடுதடி
காணாமல் போனவளே – உன்
கால் தடத்தை தேடுகிறேன் …

வேராகி முளைத்தவளே – நெஞ்சை
வேலெடுத்து அறுத்ததென்ன ..?
கூடு ஒன்று மாறிட தான்
குயிலே கூவ மறந்தாயோ …?

பாவமடி பெண் மயிலே – இந்த
பாவி என்ன செய்திடுவேன் …?
தேம்புதடி உன் நினைவு – எனை
தேற்றிடத்தான் வாராயோ …?

நாள் கணக்காய் காத்திருந்து
நாட்களிலே வாடி விட்டேன் …
பேச்சிழந்து போனவளே – என்
பேரன்பை ஏன் தொலைத்தாய் ..?

மூச்சிழந்து போகு முன்னே
முகம் வந்து காட்டாயா ..?
ஆள் மனதில் உனை வைத்தேன்
அடியே மறந்து போயிடவோ ..?

-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/10/2018

Home » Welcome to ethiri .com » செத்து போன காதல்

    Leave a Reply