சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Spread the love

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்து.

இந்நிலையில் குறித்த வாக்குமூலத்தை வழங்குவதற்காக தற்போது அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.