சீனக்கப்பல் நவம்பரில் வர அனுமதி

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்
Spread the love

சீனக்கப்பல் நவம்பரில் வர அனுமதி

சீன ஆராய்ச்சிக் கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் ”சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் வரமுடியாது ,நவம்பர் மாதத்தில் தான் வரமுடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.

சீனக்கப்பல் நவம்பரில் வர அனுமதி

”குறித்த கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது .

இது வெறுமனே ஒரு விஜயம் மாத்திரம் இல்லை . கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை வழங்கவேண்டும்.

உள்விவகாரங்களை கருத்தில் கொண்ட பின்னர் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான திகதியை வழங்கியுள்ளோம். இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள் மிகவும் அவசியமானவை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.