சிலிண்டர் திருடிய அறுவர் கைது
பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலிருந்து 80 ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்ற ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் வைத்தியசாலை ஊழியர் ஒருவரும் அடங்குவதாகவும், 2020 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 208 சிலிண்டர்கள்
காணாமல் போயுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாக அதிகாரி ஒருவரின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.