ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை தடுக்க ,இஸ்ரேல் குவித்த 250 விமானங்கள் தொடரபாக திகில் செய்திகள் வெளியாகியுள்ளன .
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,ஈரான் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்தியது .
அவ்வாறான தாக்குதலின் பொழுது ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா நேட்டோ நாட்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
மத்திய தரைக்கடல் ,செங்கடல் பகுதியில் தரித்து நின்ற விமான தாங்கி கப்பல்களில் உள்ள விமானங்கள் தாக்குதலை நடத்திட தயார் நிலையில் வைக்க பட்டு இருந்தன .
இஸ்ரேல் அணு உலைகள் தாக்குதல்
இஸ்ரேலிய அணு உலைகளை ஈரான் தாக்கினால் ,அவ்வேளை ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ,இந்த விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டு இருந்ததாக தெரிவிக்க பட்டது .
மிக பெரும் பதட்டத்தில் இஸ்ரேல் இருந்துள்ளதை மேற்படி விமான குவிப்புக்கள் மூலம் விடயம் அம்பல பட்டுள்ளது .
வெளியில் ஈரானை தாக்குவோம் என கூக்கிரலிட்ட இஸ்ரேல் இயலா நிலை இவ்விதமான நிலையில் காணப்பட்டுள்ளதை மேற்படி விமான குவிப்பு விடயம் அம்பல படுத்தியுள்ளது .