சிறையில் கைதி தூக்கு மாட்டி சாவு
மொனராகலை சிறைச்சாலையினுள் கைதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நேற்று (23) பிற்பகல் குறித்த கைதி சிறைச்சாலை வைத்தியசாலையினுள் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலைக்கு
முயற்சித்த நிலையில் அவர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று (24) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இதற்கு முன்னரும் சிறைச்சாலையினுள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
பகிணிகஹவெல, மெதகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்