சிறுவனை தாக்கிய டீச்சர் ரவுடிகளாக மாறும் டீச்சர் வாத்தியார்கள்

சிறுவனை தாக்கிய டீச்சர் ரவுடிகளாக மாறும் டீச்சர் வாத்தியார்கள்
Spread the love

சிறுவனை தாக்கிய டீச்சர் ரவுடிகளாக மாறும் டீச்சர் வாத்தியார்கள்

சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பாலகனை காட்டுமிரண்டிதனமாக தாக்கிய ஆசிரியை இவர் தானாம். இவர் கைது செய்யப்படும் வரை அதிகம் பகிருங்கள் வவுனியாவில் தாயில்லா பிள்ளையை தலை கால் தெரியாமல் தாக்கிய ஆசிரியை..


வவுனியா சுதந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் – 02 இல் கல்வி கற்கும் தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் சசிக்குமார் சகிலன் என்ற பாலகனை ஆசியை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார் .

குறித்த மாணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கொடூர ஆசிரியையை தந்தை தொடர்புகொண்டு பேசிய போது மிகவும் திமிராக பதிலளித்ததுடன் ‘ஆ, ஆ, தெரியாத உங்கள் பிள்ளையை அடிக்காமல் கொஞ்சுவார்களா?” என கேட்டுள்ளார்.


ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் சில மாணவர்கள் கல்வியில் மெல்லக் கற்பவர்களாக இருப்பார்கள் என்று அடிப்படை கூட தெரியாதவர்கள், சிறார்களை எவ்வாறு கையாள்வது என்ற உளவியல் தெரியாதவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள்.

இவர்களைப் போன்றவர்களை ஆசிரியர்களாக தொடர விடுவது மிகவும் ஆபத்தானது என்ற அடிப்படையில் குறித்த ஆசிரியை மீது சரியான நடவடிக்கையை உயர் அதிகாரிகள் எடுக்க தவறும் பட்சத்தில் இவ்வாறான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முழு அழுத்தத்தையும் உரியவர்களுக்கு வழங்க என்னைப்போன்ற பலர் தயாராக உள்ளோம்.


எமது பிள்ளைகளை தாக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது? சில அதிபர்கள் இராணுவ தளபதிகள் போலவும் சில ஆசிரியர்கள் இராணுவம் போலவும் நடந்து வருவது அண்மைக்காலமாக தொடர் கதையாகியுள்ளது இனி இவ்வாறானவர்களை புகைப்படத்துடன் வெளியிட்டு எமது பிள்ளைகளை காப்பற்ற வேண்டி வரலாம்..