சிறுமி கொலை மக்கள் போராட்டம்
சிறுமி கொலை மக்கள் போராட்டம்,வவுனியாவில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் நீதி கோரி வவுனியா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
சிறுமியின் கொலையில் மர்மம்
இறந்த சிறுமியி கொலையில் மர்மம் காணப்படுவதாகவும் அதனால் அந்த மர்மத்தை கண்டறிந்து நீதியை நிலை நட்ட கோரி மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த சிறுமியின் கொலைக்கு அவரது சிறிய தந்தையே காரணம் எனவும் ,அதனால் அப்பாவி 17 வயது இளம் பெண் சாவுக்கு காரணமானவரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரியே, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஈச்சம் குளம் பொலிஸ் நிலையில் முற்றுகை
வவுனியா ஈச்சம் குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாரணி குள மக்கள் இறந்த அப்பாவி சிறுமிக்கு நீதி நிலை நாட்டை கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இளம் பெண்ணின் படுகொலையின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் ஆதரவு உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்
இலங்கையில் நாள் தோறும் தொடரும் இடம்பெறும் இவ்வாறன மர்ம படுகொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளது .
காடுகள்,நீர் நிலைகள் ,குளங்கள்,ஏரிகள்,கிணறுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டு வருகின்றன .
இவ்வாறு தொடரும் இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை கண்டு பிடிக்க முடியாது ,இலங்கை காவல்துறை உள்ளதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .
சிலரது வன்மத்திற்காக படுகொலை செய்ய படும் அப்பாவி உயிர்களுக்கு நீதி வேண்டும் என கோரிய, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர் .
இவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகள் தட்டி கழிக்க பட்டு பல படுகொலைகள் சான்று இன்றி மவுனமாகவே மறக்கடிக்க பட்டு வருவதாக, பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் .
அதுபோல இந்த சிறுமியின் மரணம் நிகழ கூடாது என்றே இந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் .