சிரியா ,ஹிஸ்புல்லா தளபதிகள் மீது இஸ்ரேல் விமானம் ஏவுகணை தாக்குதல் -சிதறிய கார்
சிரியாவின் ,லெபனான் எல்லை ஊடக பயணித்த ஹிஸ்புல்லா மற்றும் சிரியா இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் உளவு விமானம் இரு ஏவுகணை தாக்குதலை நடத்தியது
இந்த தாக்குதலில் அவர்கள் சென்ற வாகனம் முற்றாக சிதறி சேதமானது ,எனினும் தமது இராணுவ தளபதிகள் எவ்வித
காயங்களும் இன்றி முன்னரே தப்பித்து கொண்டனர் என தெரிவித்துள்ளனர்
வாகன சாரதியின் சாதூரியமான வாகன ஓட்டுதல் காரணமாக இவர்கள் தப்பித்து கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
ஈரானின் இராணுவ தளபதியை கொன்ற அதே பாணியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
கிசுப்புல்லாவின் முக்கிய தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தில் இஸ்ரேல் ,அமெரிக்கா உள்ளதாக ஈரான் எச்சரிக்கை
விடுத்தது சில வாரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது