சிங்கள கடற்படை அராயகம் -04 இந்திய மீனவர்கள் கைது

Spread the love

சிங்கள கடற்படை அராயகம் -04 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்படை நேற்று (20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட

பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் கொவிட் -19 தொற்றுநோய்

காரணத்தினால் குறைக்கப்பட்டிருந்தாலும் கடந்த வாரம் முதல் கடற்படை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கைகள்

தொடங்கியுள்ளதுடன் ஐந்து இந்திய மீன்பிடிக் படகுகளுடன், 36 இந்திய மீனவர்களை டிசம்பர் 15 ம் திகதி கைது செய்தனர்.

அதன்படி, இன்று எலுவதீவு கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு

நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது

செய்யப்பட்ட, இந்திய மீன்பிடிப் படகு மற்றும் இந்திய மீனவர்கள் 04 பேரை குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

Leave a Reply