சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது

சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
Spread the love

சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது

சமோதி சந்தீபனி ஜயரத்ன என்ற 21 வயதுடைய யுவதி தனக்கு வழங்கப்பட்ட மருந்தினால் அல்ல, ஒவ்வாமையினால் உயிரிழந்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் முழுமையான அறிக்கையை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர் அர்ஜுன திலகரத்ன,

அர்ஜுன திலகரத்ன – “மருந்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இது நடந்தது என்று சொல்வது கடினம். ஒவ்வாமையால் ஏற்படும் நிலை. மற்ற நோயாளிகளுக்கு 2700 டோஸ் Ceftriaxone கொடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் – ஏதேனும் தவறு அல்லது அதிகப்படியான டோஸ் வழங்கப்பட்டுள்ளதா என நீங்கள் ஆராய்ந்தீர்களா?

சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது

அர்ஜுன திலகரத்ன – “Ceftriaxone என்பது ஒரு நாளைக்கு ஒரு முறை வழங்கப்படும் மருந்து. 2 மி.கி வழங்க வேண்டும.
ஒரு குப்பியில் ஒரு மில்லிகிராம் உள்ளது.

அதனால்தான் இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏதேனும் ஒவ்வாமையை இருந்ததா என பார்த்தோம். இந்த நோயாளிக்கு இதற்கு முன் எவ்வித ஒவ்வாமையும் இல்லை.

பத்திரிக்கையாளர் – முதல் டோஸின் பின்னர் லேசான ஒவ்வாமை ஏற்படும் போது, ​​அடுத்ததைக் கொடுக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு இல்லையா?

அர்ஜுன திலகரத்ன – “முதலில் கொடுத்தபோது ஒவ்வாமை ஏற்படவில்லை. இரண்டையும் கொடுத்த பின் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றின.”

சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது

இது தொடர்பான மருந்துகள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராதனை போதனா வைத்தியசாலையின் உடலியல் துறைத் தலைவர் பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ.

பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ – “ஒவ்வாமையில் அதிகரிக்கும் சிஆர்பி புரோட்டீன் மதிப்பு. சாதாரணமாக 6 அலகிற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த யுவதியின் மதிப்பு 270 அலகாக அதிகரித்திருந்தது.

மதிப்பு 270 அலகிற்கு மேல் இருக்கையில் பற்றீரியாவின் அறிகுறிகள் தென்படுகின்றன. நோய்த்தொற்று பிறகு நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, பொதுவாக Ceftriaxone மருந்து

பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மருந்து ஒவ்வாமை. அரிதாக, சிலர் இறக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த யுவதியும் இறந்துவிட்டார்.”