சங்கர் பக்கம் இனிமேல் தலை வைத்து படுக்க மாட்டேன் – வடிவேலு அதிரடி

Spread the love

சங்கர் பக்கம் இனிமேல் தலை வைத்து படுக்க மாட்டேன் – வடிவேலு அதிரடி

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சங்கர் பற்றி நடிகர் வடிவேலு பேசி இருக்கிறார்.

சங்கர் பக்கம் இனிமேல் தலை வைத்து படுக்க மாட்டேன் – வடிவேலு அதிரடி
வடிவேலு – சங்கர்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் வடிவேலு பேசும்போது, நான் நடிக்காமல் இருந்த நேரத்தில், கொரோனா வந்து என் பிரச்சனையை

சாதாரணமாக ஆக்கிவிட்டது. அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த காமெடி காட்சிகள் கைகொடுத்தது.

தொடர்ந்து நான்கு படத்தில் நடிக்க இருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஷ் கரண், சபாஷ் கரணாக மாறிவிட்டார். இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி, மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி.

வடிவேலு

எனக்கு எண்டே கிடையாது. நான் கால் வச்ச இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வச்சாங்க.. எல்லாத்திலயும் தப்பித்து விட்டேன். என் மீது வந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்.

இனிமேல் சங்கர் தயாரிப்பில், இயக்கத்தில் நடிக்க மாட்டேன். அதுபோல் வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன், என்றார்.

Leave a Reply