சகல பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான வகுப்புக்கள் ஆரம்பம்
சகல பாடசாலைகளிலும் 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான
வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள இன்று முதல்
வழமைபோன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை கற்றல் கற்பித்தல்
செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை தரம்
1 முதல் தரம் 5 வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.