கோட்டாவுக்கு ஆப்பு ஆரம்பம் -ஆரம்பித்து வைத்த சஜித்

Spread the love

கோட்டாவுக்கு ஆப்பு ஆரம்பம் -ஆரம்பித்து வைத்த சஜித்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது

தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (12) குறித்த பிரேரணைகளில் கைச்சாத்திட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணைக்கு மேலதிகமாக, 20 ஆவது திருத்தம் மாற்றப்பட்டு 19


ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்படல் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும்


அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது தெரிவித்தார்.

    Leave a Reply