கோட்டபாயாவுக்கு பேத்தி – கட்டிப்பிடித்து கொஞ்சினார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டுக்குச் சென்று, இன்றுக்காலை நாடுதிரும்பினார்.
தனது பாரியாருடன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற பல்வேறான நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், தன்னுடைய மகனின் மகளையும் (பேத்தி) பார்வையிட்டார். அது தொடர்பிலான புகைப்படத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தனது பேத்தியான துலன்யாவை முதன்முறையாக சந்தித்ததாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்