கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்களை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) மாலை கடவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம வீதிக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட
ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 29 வயதுடைய மீகஹவத்த மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுதொழில் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரை சுட்டுக்கொலை செய்ய வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பேலியகொட பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது