கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, நாவலப்பிட்டி
நகர வர்த்தக நிலையங்களை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்துக்கு உட்பட்ட பகுதியில், 16 பேருக்கு கொரோனா தொற்று
உறுதிதானதையடுத்தே, நாவலப்பிட்டி வர்த்தக சங்கத்தினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
நாவலப்பிட்டி நகர் முழுவதும் தொற்று நீக்கப்பட்டதன் பின்னர், வர்த்தக
நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிறி கருணாதாஸ தெரிவித்தார்.