கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கியசூரி

Spread the love

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கியசூரி

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை

வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின்,

சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.

உதயநிதி – சூரி
உதயநிதியிடம் காசோலை வழங்கும் சூரி

இந்நிலையில் நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், மேலும் தன் மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு

பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.

Leave a Reply