கொரோனா: இன்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210

Spread the love

கொரோனா: இன்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210

இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நேற்றைய (23) தினம் ஜவர் உயிரிழந்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ,மே 22 ஆம் திகதி

வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ள தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று மேலும் 2950 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 2945 பேர் புத்தாண்டு கொவிட் கொத்தணியுடன்

சம்பந்தப்பட்டவர்கள் என்றும் 14 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply