கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி…. சோகத்தில் குஷ்பு
நடிகையும், அரசியல் ஆர்வலருமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளார்.
கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி…. சோகத்தில் குஷ்பு
குஷ்பு
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம்
உள்ளது. குறிப்பாக கொரோனா அதிகம் பதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள தனது நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக நடிகை குஷ்பு தனது
டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து
குஷ்புவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.