கொரனோ வேளையில் -ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று

Spread the love

கொரனோ வேளையில் -ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொதுதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் 12,985 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆகக் கூடுதலாக 17 இலட்சத்து 85 ஆயிரத்து 964 வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 22 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் வாக்களிப்பில் 196

உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுவார்கள். மிகுதி 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்னர்.

அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் 7,452 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னைய தேர்தல்களில் போன்று

இல்லாமல் இம்முறை மாலை 05.00 மணி வரை வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பில் வைரஸ் பரவலுக்கு

வாய்ப்பில்லை. வாக்காளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் நீலம்/கறுப்புப் பேனைகளை வாக்காளர்கள் கொண்டு செல்லவேண்டும்.

நாட்டின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகளின் சார்பில் 3,652 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3,800 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்ட ணி ஐக்கிய தே சியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் பெரும்பாலான மாவட்ட ங்களில் போட்டியிடுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.நாட்டில் நிலவும்

கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு

செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19 பேர் , கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறை மாவட்ட த்தில் 10, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 05, நுவரெலியா

மாவட்டத்தில் 08, காலி மாவட்டத்தில் 09, மாத்தறை மாவட்ட த்தில் 07, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07, யாழ். மாவட்டத்தில் 07, வன்னிமாவட்ட த்தில் 06, மட்டக்களப்பு மாவட்டத்தில் 05,

திகாமடுல்ல மாவட்ட த்தில் 07, திருகோணமலை மாவட்டத்தில் 04, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 08, அனுராதபுரம் மாவட்டத்தில் 09, பொலன்னறுவை மாவட்டத்தில் 05, பதுளை

மாவட்டத்தில் 09, மொனராகலை மாவட்டத்தில் 06, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 09 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இம்முறை அதிக வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 17,85,964 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 13,48,787 பேரும், கண்டி மாவட்டத்தில் 11,29,100 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 17,09,209, களுத்துறை

9,72,319, மாத்தளை 4,07,569, நுவரெலியா 5,77,717, காலி 8,67,709, மாத்தறை 6,59,587, ஹம்பாந்தோட்டை 4,93,192, யாழ்ப்பாணம் 5,71,848, வன்னி 2,87,024 , மட்டக்களப்பு 4,09,808, திகாமடுல்ல 5,13,979, திருகோணமலை 2,88,868, புத்தளம் 6,14,370, அனுராதபுரம் 6,93,634,

பொலன்னறுவை 3,31,109, பதுளை 6,68,166, மொனராகலை 3,72,155, இரத்தினபுரி 8,77,582, கேகாலை 6,84,189 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை அதிக வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கொழும்பில் அரசியல் கட்சிகளின் சார்பில் 352 பேரும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து 572 பேரும்

போட்டியிடுகின்றனர். பொலன்னறுவை மாவட்டத்திலேயே குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 152 பேர் அங்கு

போட்டியிடுகின்றனர். வாக்களிப்பு நிலையங்களில் வைரஸ் பரவலுக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மக்களுக்கு அறிவித்துள்ளார்.

      Leave a Reply