கொரனோ பரவல் எதிரொலி – முடங்கிய கொழும்பின் சில பகுதி
கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26)
நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக
அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இப்பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பலர் அடையாளம்
காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.