கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்

Spread the love

கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதாக தகவல்கள் வெளியானது. இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பாதித்த சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது.

அதீத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், Steroid medicine எடுப்பவர்கள், பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள், சில தெரபிகள் எடுத்துக்கொள்வோருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் புதுவையிலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தொடங்கியுள்ளது. புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 5 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் கண் பார்வையை இழந்துள்ளனர்.

நாள்தோறும் புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் தெரிவிக்கையில்:-

கொரோனா வந்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இதுவரை 14 நோயாளிகள் வந்துள்ளனர். நோயின் தாக்கம் அதிகரித்து சிகிச்சைக்கு வரும்போதே 5 பேருக்கு பார்வையில்லை.

கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியே, கண்ணில் பரவி ரத்தக்குழாய்களை சிதைக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு, சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்களை இந்நோய் தாக்குகிறது.

ஸ்டீராய்டு அதிகமாக எடுப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. அவர்களின் உடலில் பூஞ்சை வளர்ந்து கண் பார்வையை பாதிக்கிறது. சிகிச்சைக்காக புதுவையை சேர்ந்தவர்கள் 3 பேர் வந்துள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பலர் நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகம்-புதுவையில் இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வது கஷ்டம். கண்ணை சுற்றி வீக்கம், வாய், மூக்கில் ரத்தம் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று எண்டாஸ் கோப் பார்த்தால் நோயின் தாக்கம் தெரியும். எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் கரும்பூஞ்சை தொற்று வராது.

சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களை பெருமளவில் தாக்கும். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

என்று தெரிவித்தார்..

நீண்டகால நோய்களுடன் உள்ளவர்களுக்கு புதுவை சுகாதாரத்துறை சார்பில் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொடர் நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை, இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் தவறாமல் மருந்தை உட் கொண்டு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

இருதய ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இருதய ரத்தக் கோளாறுக்கு ஸ்டன்ட் வைத்துள்ளவர்கள் தவறாமல் ஆஸ்பிரின் மற்றும் ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறாமல் தாங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண் டும்.

இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கருப்பு பூஞ்சை போன்ற உயிர் கொல்லி நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் இதனை உணர்ந்து தடுப்பூசியை உடனே போட்டுக் கொண்டு தங்களையும் தங்கள் பாசத்துக்கு உரிவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தேவை இல்லா பயணங்களை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

    Leave a Reply