கொரனோ தாக்குதல் 13,000 மக்கள் பலி -மூன்று லட்சம் மக்கள் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலினால் இதுவரை பதின் மூன்றாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக புதிய புள்ளி விபரம் ஒன்று தெரிவித்துள்ளது
ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ளவர்களையே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாக வரையறுக்க பட்டுள்ளது
இத்தாலியில் இவ்விதம் உள்ள மக்கள் பலர் பலியாகி வருகின்றமையும் தற்போது இராணுவம் குவிக்க பட்டு இராணுவ
வண்டிகளில் மனித சடலங்கள் எடுத்து சென்று நல்லடக்கம் செய்ய பட்டு வருகிறது ,
இறந்தவர்கள் தீயில் எரிக்க படுவதான தகவல்கள் வேகமாக பரவி வருகிறது
கிறிஸ்தவ மத முறைமைக்கு எதிராக இந்த தீயில் எரிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்ற மாறு பட்ட தகவல்களும் தொடராக வெளிவந்த வண்ணம் உள்ளன
எனினும் அரசின் நலன் காக்கும் முகமாக மேற்படி செய்திகள் மூடி மறைக்க படுகின்றன ,