கொரனோ அதிகரிப்பு -யாழில் பாடசாலைகள் அடித்து பூட்டு

Spread the love

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், யாழ். மாவட்டத்தில் மிக வேகமாக அதிகரித்து

வருவதால், யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இன்று (29) முதல் ஒரு வாரத்துக்கு, பாடசாலைகள் மூடப்படும். அதுதொடர்பிலான தீர்மானம் நேற்று (28) மாலை எட்டப்பட்டுள்ளது .

.வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் முதலாம் தரத்தைத் தவிர, ஏனைய அனைத்துத் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (29) ஆரம்பமாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை குழுக்களாகப் பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கலாம்

என அறிவுறுத்தி, கல்வி அமைச்சின் செயலாளரால், ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply