கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி

கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி
Spread the love

கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் தெரிவு இடம்பெற வேண்டும் என்கின்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன .

கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கி வரும், சுமந்திரன் தான்தோன்றி தனமான செயல் பாடு காரணமாக, தமிழர்களின் வெறுப்பிற்கு காரணமாக விளங்கிய,சுமந்திரனால் ,கூட்டமைப்பு பல துண்டுகளாக உடையும் நிலைக்கு சென்றுள்ளது

காலாவதியான சம்பந்தன்

வயதான காலத்தில் கட்சியை வழிநடத்தி செல்ல முடியா
படுக்கையில் முடங்கி போன சம்பந்தரின் செயலாற்ற நிலை
காரணமாக ,ஸ்ரீதரன் தலைவராகும் நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காண படுகிறது .

இலங்கை மற்றும் வெளிநாட்டு தமிழர்களின் மனங்களில் ,
ஆழமாக கால் ஊன்றியவர் ,கல்விமானாகவும் ,வாய்மை நிலை நாட்டும் பண்பாளனாக ,ஸ்ரீதரன் எம்பி
விளங்கி வருகிறார் .

அவ்வாறான ஸ்ரீதரன் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க பட்டால் ,இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல ,வீழ்ந்து கிடக்கும் இலங்கை பொருளாதாரத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது .

கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி

சுமந்திரன் தானே தலைவர் என போட்டிக்கு சென்றால் ,எதிர்த்து நிற்க அதனை எதிர்கொள்ள தயார் என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் .அதில் ,ஸ்ரீதரன் மக்கள் வாக்கில் முதன்மை பெறும் நிலைக்கு செல்வார் என்பது வெளிப்படையாக உள்ளது .

சுமந்திரன் இரட்டை வேடம்

தமிழர்களின் பிரதிநிதிகள் என கோரியவாறு, இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் ,தமிழர்களை எவ்வாறு பிரதி நிதி படுத்த முடியும் என்கின்ற கேள்வி தமிழர்களினால்
வாதங்களுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது .

ஸ்ரீதரன் எம்பியை போல வெளிப்படை தன்மையாகவும் ,உண்மை தன்மையாகவும் ,நட்பு நிலையோடும் ,சிறந்த தமிழர் பண்பாளனாக விளங்கும் நிலையில் கூட்டமைப்பில்
எவரும் இல்லை என்பதே மக்கள் கருத்தாக உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.