குண்டு தாக்குதல்களில் சிக்கி 500 மக்கள் பலி -1,293 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் தொடர் போரினால் அந்த மண்ணில் நாள் தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர் .
இவ்வாறு கடந்த 90 நாட்களில் சுமார் ஐநூறு பேர் பலியாகியும் மேலும் 1,293 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் ஐம்பதுக்கு மேற் பட்டவர்கள் உடல் உறுப்புக்கள் செயல் இழந்த நிலையில் காண படுகின்றனர்
பல நாட்டு படைகள் ,மற்றும் அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் போராடி வருகின்றனர் .
இவ்வாறான தாக்குதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பெரும் தொகையில் இறந்து வருகின்றனர் .
முடிவில்லாது தொடர்ந்து நீண்டு செல்லும் இந்த போரினால் மக்கள் சொல்லென்னா இன்னல்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது