கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை

Spread the love

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இரசாயன உரங்களை முழுமையாக தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இரசாயன உரப் பாவனையை தடை செய்வது என்பது, உடனடித் தீர்மானம் இல்லையெனவும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்திலான தீர்மானம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சேதனத் திரவம், நைதரசன் சாறு போன்றவற்றை உடனடியாக பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply