கிளிநொச்சியைச் சென்றடைந்த பேரணி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரிலிருந்து
வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம்
ஊடாக முறிகண்டி வந்தடைந்து இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.
இப்பேரணியானது இரவு கிளிநொச்சியில் தங்கி நாளை காலை 8.00 மணியளவில்
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம்
சென்றடையவுள்ளது.