கிளிநொச்சியில் நடமாடும் நீதி சேவை
வடக்கு மக்களுக்கான நீதி அமைச்சின் நடமாடும் சேவை திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை கிளிநொச்சியில் நேற்று (01) நடைபெற்றது.
கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச வரவேற்கப்பட்டார்..
இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து அகதிகளாக சென்று, மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்
நீதியமைச்சினால் விசேட
நடமாடும் சேவை வடக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.