கிளிநொச்சியில் உலக கடற்புல் தினம்

கிளிநொச்சியில் உலக கடற்புல் தினம்
Spread the love

கிளிநொச்சியில் உலக கடற்புல் தினம்

உலக கடற்புல் தினம் (World Sea grass Day) கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில், கிளிநொச்சியில் உலக கடற்புற்கள் தினம் நேற்று (02) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி, முழங்காவில் மகாவித்தியாலயத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பூநகரி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தினைச் சேர்ந்த 75 சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டு, சிறப்புரைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, கடற்புற்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு, நாச்சிக்குடா கடலுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு குறித்த விடயங்கள் செய்முறையாக காண்பிக்கப்பட்டன