கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய
தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தியாகி திலீபன் அவர்கள் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
எமது உணர்வு! எமது உரிமை!