கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
பொலீஸ் விசாரணை
,தற்போது நாம் கிளிநொச்சி காவல்துறையினரை தொடர்பு கொண்டு வினவியபோது இறப்பை உறுதி படுத்திய அவர்கள் இது ஒரு தற்கொலை என்றனர்
நாம் இது திட்டமிப்பட்ட படு கொலையாக உள்ளதாக சந்தேகம் உள்ளது என்ற பொழுது ,விசாரணைகள் இப்பொழுது ஆரம்பிக்க
பட்டுள்ளது என்றும் ,விரைவில் இது தொடர்பான முழுமையான விபாரங்கள் தெரிய படுத்த படும் என போலிசார் நமக்கு தெரிவித்தனர்
பளை,முரசுமோட்டை வாலிபர்
பளை,முரசுமோட்டையை பூர்வீகமாக கொண்ட சுமார் நாப்பது வயது மதிக்க தக்க இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
சகோதரன் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார் இன்னும் வரவில்லை என அவரை தேடி சென்ற பொழுது ,அவரது வாகனம் குறித்த பகுதியில் நிற்பதை கண்ணுற்ற சகோதரன் ஒடி சென்று பார்த்த
பொழுது அவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி உற்றுள்ளனர் ,அதன் பின்னர் போலீசாருக்கு தெரிய படுத்த பட்டுள்ளது
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த படுகிறது
மர்ம கொலைகள்
கோத்தபாயவின் ஆட்சியில் தொடராக இவ்விதமான மர்ம கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,தனி நபர் ,அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது
இறந்தவர் இவ்விதமான தற்கொலையில் ஈடுபடும் சிந்தனை கொண்டவர் அல்ல என்பதே உறவினர்கள் வாதமாக உள்ளது
இந்த மர்ம கொலைகள் பின்னால் உள்ளவர்கள் கண்டுபிடிக்க பட்டு தண்டிக்க படுவார்களா ..?