காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

Spread the love

காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

இரவு வேளைகளில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ- கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு திருடும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    Leave a Reply